No icon

குடந்தை ஞானி, ஆசிரியர்

பேராயர் ஜார்ஜ் கன்ஸ்வைன் அவர்களுக்கு  ஈடு செய்ய இயலாத இழப்பு

பேராயர் ஜார்ஜ் கன்ஸ்வைன் அவர்களுக்கு  ஈடு செய்ய இயலாத இழப்பு

ஏப்ரல் 01, 2021 அன்றே தி டாகஸ்போஸ்ட் என்னும் ஜெர்மன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் திருத்தந்தையின் நீண்டகால செயலரான பேராயர் ஜார்ஜ் கன்ஸ்வைன் திருத்தந்தை பெனடிக்ட் இன்னும் சில மாதங்களே உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார். பேராயர் ஜார்ஜ் கன்ஸ்வைன் அவர்கள் ஜெர்மனியில் உள்ள ஃபெரெய்பெர்க் உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் தலைமைப் பதவியில் இருந்தபோது, அவரது தனிச் செயலராக மிக மிக நெருக்கமாக அவருக்குத் தொண்டாற்றினார். அவருடைய பணி விருப்பு ஓய்வுக்குப் பிறகு, தற்போதைய திருத்தந்தையின் செயலராகப் பணியாற்றிக்கொண்டே, முன்னாள் திருத்தந்தைக்கும் செயலராகப் பணியாற்றி, அவரை அடிக்கடி சந்திப்பது, அவருடன் உணவருந்துவது., அவருடன் இணைந்து செபிப்பது, திருப்பலி ஒப்புக்கொடுப்பது என்று சிறப்பான தோழமையை வெளிப்படுத்தினார். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் மறைவு பேராயர் கன்ஸ்வைன்னுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகும்.

பேராயர் ஜார்ஜ் கன்ஸ்வைன் அவர்களுக்கு இரங்கல்

எனது நண்பரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து ஐந்து நிமிட அளவுக்குப் பேசுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்து இன்றளவும் ஊக்கம் தருகிற பேராயர் ஜார்ஜ் கன்ஸ்வைன் அவர்களுக்குநம் வாழ்வு வார இதழ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. மறைந்த திருத்தந்தைக்காக இவ்விதழை கனத்த இதயத்துடன் அர்ப்பணிக்கிறது. Mein herzliches Beileid!

 

Comment